Latestஉலகம்

இது வெறும் தொடக்கம் தான், மீண்டும் சீண்டினால் மொத்த பாகிஸ்தானுமே இருக்காது; மோடி கடும் எச்சரிக்கை

புதுடெல்லி, மே-13 – மீண்டுமொரு பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தானே இருக்காது; அந்தளவுக்கு இந்தியாவின் பதிலடி அமையுயென, பிரதமர் நரேந்திர மோடி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெண்களின் குங்குமத்தை அழித்தால் என்ன நடக்கும் என்பதை இப்போது பயங்கரவாதிகள் உணர்ந்திருப்பார்கள்; அந்தளவுக்கு அவர்களின் முகாம்களைத் துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளோம்.

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு, ‘ஆப்பரேஷன் சிந்துார்’ மூலமாக நீதி கிடைத்துள்ளதாக மோடி குறிப்பிட்டார்.

நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளைக் கொன்றுள்ளோம்.

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் இராணுவம் மரியாதை செய்துள்ளது.

இதன் மூலம் ஒட்டு மொத்த உலகத்திற்கும் தனது உண்மை முகத்தை பாகிஸ்தான் வெளிச்சம் போட்டு காட்டி விட்டது.

பயங்கரவாத முகாம்களை முற்றிலும் அழிக்க வேண்டும்; இல்லையேல் பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் பலியாக நேரிடும்.

போர்க்களத்தில் ஒவ்வொரு முறையும் நாம் பாகிஸ்தானை தோற்கடித்துள்ளோம்; இந்த முறையும் இந்தியாவின் பதிலடி தாங்காமல் உலக நாடுகள் தலையிட அது கெஞ்சியது.

இப்போது ஏற்பட்டுள்ளது தற்காலிகப் போர் நிறுத்தம் தான்.

எனவே இந்தியாவின் முப்படைகளும் தொடர்ந்து உச்சபட்ச விழிப்பு நிலையில் உள்ளன என்றார் அவர்.

தெற்காசியாவில் அணு ஆயுத அச்சுறுத்தலை இந்தியா சகித்துக் கொள்ளாது என்றும் மோடி நினைவுறுத்தினார்.

“தண்ணீரும் இரத்தமும் ஒன்று சேர முடியாது; அது போல தீவிரவாதத்தையும் அமைதிப் பேச்சுவார்த்தையையும் ஒரே நேரத்தில் நடத்த முடியாது” என்றார் அவர்.

பாகிஸ்தான் மீதான தாக்குதல் மற்றும் போர் நிறுத்தம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு விளக்கம் வகையில் நேற்றிரவு முதன் முறையாக தொலைக்காட்சியில் மோடி உரையாற்றினார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!