Latestமலேசியா

அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் ம.இ.கா கவலை அடையவில்லை – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், டிச 17 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது அமைச்சரவையில் இடம் வழங்கப்படாததற்காக ம.இ.கா கவலை அடையவில்லை என்பதோடு அதனால் எந்தவொரு பாதிப்பும் இல்லையென ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ S.A. விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.

ஒற்றுமை அரசாங்கத்திற்கு நாங்கள் ஆதரவு வழங்கி வருகிறோம். அந்த விவகாரத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை என நேற்று நடைபெற்ற ம.இ.கா மத்திய செயலவை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசியபோது விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அமைச்சர் பதவி கொடுத்தாலும் சரி, கொடுக்காவிட்டாலும் சரி . நாங்கள் தொடர்ந்து வேலை செய்வோம் . இந்திய சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காக நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்புவோம்.

ஏற்கனவே இந்திய சமுக மேம்பாட்டுக்கு என்ன தேவை என்பதை பிரதமரிடம் தெரிவித்திருக்கிறோம்.

அவற்றை முக்கியத்துவத்தின் அடிப்படையில் நிறைவேற்றுவதற்கும் பிரதமர் உறுதியளித்துள்ளார் என விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அமைச்சரவை மாற்றத்தில் தமிழ் பேசக்கூடிய ஒருவர் முழு அமைச்சராக நியமிக்கப்டாததால் இந்திய சமுகம் ஏமாற்றம் அடைந்திருப்பது பற்றி கேட்ட போது பிரதமர் அன்வார் மீது நம்பிக்கை வைத்துத்தான் இந்திய சமூதாயம் அவருக்கு ஆதரவு வழங்கியிருப்பதால் சமுகத்தின் பிரச்சனையை நேரடியாக கவனிப்பதற்கு அவர் திட்டமிட்டிருக்கலாம் என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இதனிடையே மாணவர்களுக்கான கல்வி உதவி வழங்குவது உட்பட பல்வேறு நடவடிக்கைகளில் நாங்கள் முன்னெடுத்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.

MIED கல்வி நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு பிரதமர் அன்வார் கலந்துகொள்ள இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் விக்னேஸ்வரன் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!