Latestமலேசியா

ஜோகூரில், மின்னூட்டும் போது மின்சார மெர்சிடிஸ் கார் தீப்பிடித்தது

ஜோகூர் பாரு, ஜனவரி 1 – ஜோகூர், தம்பொயிலுள்ள, கார் ஷோரூம் விற்பனை மையத்தில், “சார்ஜ்” செய்யும் போது ஆடம்பர மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்று தீப்பிடித்தது.

அதனால் அந்த கார் 90 விழுக்காடு தீக்கிரையான வேளை ; சம்பந்தப்பட்ட விற்பனை மையத்தின், மின்சார வாகனங்களை மின்னூட்டும் முகப்பு, 20 விழுக்காடு வரை சேதமடைந்தது.

அதோடு, அந்த கார் இருந்த விற்பனை மையமும், ஐந்து விழுக்காடு வரை தீயில் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

அந்த தீ விபத்து குறித்து ,நேற்று பிற்பகல் மணி 2.45 வாக்கில் அவசர அழைப்பு கிடைத்தாக, ஜோகூர் தீயணைப்பு மீட்புப் படையின் நடவடிக்கை அறை ஓர் அறிகையின் வாயிலாக தெரிவித்தது.

எனினும், அவ்விபத்தில் உயிருடற் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

தீக்கான காரணமும், சேதமும் ஆராயப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!