Latestமலேசியா

தஞ்சோங் செப்பாட்டில் வளர்ப்பு பன்றிகள் கழிவு தூய்மைக் கேடு – சிலாங்கூர் சுற்றுச் சூழல்துறை விசாரணை

கோலாலம்பூர், ஜன 23 – கோலா லங்காட்டின் தஞ்சோங் செப்பாட்டில் (Tanjung Sepat ) உள்ள ஒரு பகுதி பன்றிக் கழிவுகளால் மாசுபட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளை சிலாங்கூர் சுற்றுச்சூழல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த புகார் குறித்து கவனிக்கும்படி தனது அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டிருப்பதாக சிலாங்கூர் சுற்றுச் சூழல் துறையின் தலைமை இயக்குநர் வான்டி யாட்ஷிட் ( Wandi Yadzit ) தெரிவித்தார்.

Tanjung Sepat வட்டாரத்திலுள்ள பன்றிப் பண்ணைகள் முறையான சுத்தகரிப்பு இன்றி அல்லது விதிமுறைகளை பின்பற்றாமல் பன்றிக் கழிவுகளை கொட்டுவதால் அவை மலாக்கா நீரிணையில் பாய்வதாக நேற்று பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அகமட் பாடில் ஷாரி ( Ahmad Fadhil Shaari ) குற்றச்சாட்டியிருந்தார்.

இந்த சூழ்நிலை அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதோடு , உடனடியாக கவனிக்கப்படாவிட்டால், அப்பகுதியில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் அழியக்கூடிய அபாயம் ஏற்படலாம் என்றும் அவர் கூறியிருந்தார். சுற்றுச்சூழல் துறை மற்றும் கால்நடை மருத்துவ சேவைகள் துறை மூலம் கூட்டரசு அரசாங்கம் தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!