Latestமலேசியா

சிலாங்கூரில் சுங்கை காபுல் ஆற்று நீர் இளஞ்சிவப்பாக மாறிய மர்மம்

ஷா ஆலாம், ஜனவரி-15, சுங்கை காபுல் ஆற்றில் 500 மீட்டர் நீளத்துக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் நீரோட்டம் கண்டறியப்பட்டதை அடுத்து, LUAS எனப்படும் சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் மஞ்சள் நிற எச்சரிக்கை முறையை முடுக்கி விட்டுள்ளது.

நேற்று மாலை 6.40 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான ரோந்து பணியின் போது அந்த இளஞ்சிவப்பு நிறத்திலான நீர் கண்டறியப்பட்டது.

நீர் வள தூய்மைக்கேட்டை உடனடியாகத் தடுக்கும் அவசர நடவடிக்கையாக அந்த மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மாசடைந்த நீர், செம்ஞ்சே ஆற்றின் நீர் சுத்திர்கரிப்பு ஆலையைப் பாதிக்கலாமென்பதால் அம்முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியமாவதாக LUAS கூறியது.

பெரானாங் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து அந்த மாசடைந்த நீர் வெளியேறியது கண்டறியப்பட்டது,

இதையடுத்து, நீர் வெளியேற்றத்தை உடனடியாக நிறுத்துவதோடு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளுமாறும் அத்தொழிற்சாலை உத்தரவிடப்பட்டது.

மலேசிய இரசாயணத் துறையின் பரிசோதனைகளுக்காக மாசடைந்த நீர் மாதிரியும் எடுக்கப்பட்டுள்ளதாக LUAS கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!