
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 5 – கடந்த மே 24-ஆம் தேதி, முவார் ஜாலான் சுங்கை அபோங்கிலுள்ள உணவகமொன்றில் கூர்மைமிக்க ஜப்பானிய வாளை கொண்டு, மற்றொருவரை தாக்க முயற்சித்த சம்பவத்தில் கைதான, 31 வயதான சுக்ரி அகமதுவுக்கு, இன்று நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 2 பிரம்படிகளையும் விதித்துள்ளது.
அச்சம்பத்திற்குப் பிறகு, கைதான ஆடவன் போதைப்பொருள் உட்கொண்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பொது இடங்களில், தாக்குதல் ஆயுதங்களை எடுத்துச் சென்றதற்காகவும் போதைப்பொருள் பயன்பாட்டிற்காகவும் இந்த ஒட்டு மொத்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மே 29ஆம் தேதியன்று கைது செய்யப்பட்ட அக்குற்றவாளிக்கு, இரண்டு தண்டனைகளும் ஒரே நேரத்தில் நீடிக்கும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.