
பெட்டாலிங் ஜெயா – மே 27 – தெருநாயை சட்டவிரோதமாகக் கொன்றதற்காக, 4 விலங்கு ஆர்வலர்கள் தங்களுக்கு எதிராகத் தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி திரங்கானு அரசும் பெசுட் மாவட்ட ஊராட்சி மன்றமும் இணைந்து தாக்கல் செய்த மனுவை இன்று கோலா திரங்கானு உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், ‘கோப்பி’ என்ற தெருநாய், ஊராட்சி மன்ற அதிகாரி ஒருவரால் சட்டவிரோதமாக கொல்லப்பட்ட சம்பவம், மலேசியாவில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருந்தது.
அந்தக் கொடூர செயலைக் கண்டித்து தொடுக்கப்பட்ட இவ்வழக்கு, விலங்கு நலச் சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நோய் பரவுதலைத் தடுப்புதற்கும், மனித உயிருக்கெதிரான ஆபத்துக்களை தவிர்ப்பதற்கும் சட்ட ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகளே சாலச் சிறந்தது என்றும், வழக்கை இரத்து செய்யும் கோரிக்கைகளை நீதிமன்றம் நிராகரித்தது மிக பெரிய வெற்றியாக கருதப்படுகின்றதென்று வழக்கறிஞர்கள் கருதுகின்றனர்.