Latestமலேசியா

சுங்கை பெஞ்சாலாவில், சொந்த பெற்றோரை வெட்டிக் கொன்ற ஆடவனுக்கு எதிராக குற்றச்சாட்டு

கோலாலம்பூர், டிசம்பர் 15 – தலைநகர், சுங்கை பெஞ்சாலாவிலுள்ள, வீடொன்றில், கடந்த சனிக்கிழமை, சொந்த பெற்றோரை கொலைச் செய்த ஆடவனுக்கு எதிராக இன்று நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

42 வயது அபாண்டி முஹமட் அகூஸ் @ முஹமட் அலி எனும் அந்த ஆடவனிடமிருந்து இன்று வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.

82 வயது தந்தை முஹமட் அகூஸ் முஹமட் அலி ஒமார் மற்றும் 72 வயது தாய் டர்லிஸ்மா ஞாது சலோவையும் கொலை செய்ததாக, அவ்வாடவன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளான்.

டிசம்பர் ஒன்பதாம் தேதி, இரவு மணி 7.20 வாக்கில், கம்போங் சுங்கை பெஞ்சாலாவிலுள்ள, வீடொன்றில், அவன் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அவனுக்கு எதிராக, குற்றவியல் சட்டத்தின், 302-வது பிரிவின் கீழ், கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!