
வாஷிங்டன், ஜூன்-17 – அமெரிக்காவில் சமூக ஊடகங்களும் வீடியோ கட்டமைப்புகளுமே தற்போது செய்திகளின் முக்கிய ஆதாரமாக மாறியிருக்கின்றன; அவை பாரம்பரிய தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் செய்தி
வலைத்தளங்களை முந்திச் சென்றுள்ளதாக புதிய ஆராய்ச்சி கூறுகிறது.
பாதிக்கும் மேற்பட்ட அதாவது 54 விழுக்காட்டு மக்கள் ஃபேஸ்புக், X மற்றும் யுடியூப் போன்றவற்றிலிருந்தே செய்திகளைப் பெறுகிறார்கள்;
பாரம்பரிய செய்தி ஆதாரமாக இருந்த தொலைக்காட்சிகள் இரண்டாமிடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளன; தொலைக்காட்சிகளின் வழி 50 விழுக்காட்டினர் மட்டுமே தற்போது செய்திகளைப் பெறுகின்றனர்; செய்தி தளங்கள் மற்றும் செயலிகளை 48 விழுக்காட்டினர் நம்பியுள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் கூறியது.
சமூக ஊடகங்கள் மற்றும் ஆளுமை சார்ந்த செய்திகளின் எழுச்சி அமெரிக்காவிற்கு மட்டும் உரியதல்ல, எல்லா நாடுகளிலும் காணப்படுபவை தான்; ஆனால் மாற்றங்கள் மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் வேகமாகவும் அதிக தாக்கத்துடனும் அது நடப்பது தெரிய வந்துள்ளது.
சில அரசியல்வாதிகள், முக்கிய நேர்காணல் செய்பவர்களை விட அனுதாபமுள்ள இணைய தொகுப்பாளர்களுக்கு தங்கள் நேரத்தைக் கொடுக்கும் போக்கையும் இந்த ஆய்வு எடுத்துக்காட்டியது.
இவ்வேளையில், படுவேகமாக வளர்ந்து வரும் சமூக ஊடகமாக டிக் டோக் திகழ்கிறது.
உலகெங்கிலும் 17 விழுக்காட்டு மக்களால் செய்திகளுக்காக டிக் டோக் பயன்படுத்தப்படுகிறது; இது கடந்த ஆண்டை விட 4 விழுக்காடு அதிகம் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டது.
செய்திகளைப் பெற AI chatbot-களைப் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது; குறிப்பாக 25 வயதுக்குட்பட்டவர்களிடையே ஒட்டுமொத்த மக்கள் தொகையை விட அது 2 மடங்கு பிரபலமாக உள்ளது.
ஆனால் பெரும்பாலான மக்கள், செய்திகளை வெளிப்படையானதற்றதாகவும், துல்லியம் குறைந்ததாகவும், நம்பகத்தன்மையற்றதாகவும் AI மாற்றி விடும் என நினைக்கிறார்கள்.
14-ஆவது ஆண்டாக 48 நாடுகளில் 100,000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.