
கோலாலம்பூர், மார்ச்-20 – வரும் நோன்புப் பெருநாளுக்கும் டோல் கட்டணங்களுக்கு அரசாங்கம் 50 விழுக்காடு கழிவுச் சலுகை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி மாதம் சீனப் புத்தாண்டுக்கு வழங்கப்பட்டதை போன்றே ஹரி ராயாவுக்கும் வழங்கப்படுமென பொதுப் பணித் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.
கொஞ்சம் பொறுமையாக இருங்கள்; உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகுமென்றார் அவர்.
கடந்த சீனப் புத்தாண்டுக்கு அரசாங்கம் 2 நாட்களுக்கு 50 விழுக்காட்டுக் கழிவுச் சலுகையில் டோல் கட்டணத்தை வழங்கியது.
முதல் வகுப்பு தனியார் வாகனங்களுக்கு அச்சலுகை வழங்கப்பட்டது.