Latestவிளையாட்டு

FIFAவின் சிறந்த காற்பந்து வீரர் விருதை மீண்டும் வென்ற மெஸ்ஸி

லண்டன், ஜன 17 –இந்த ஆண்டுக்கான கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.

அனைத்துலக கால்பந்து கூட்டமைப்பு ஆண்டு தோறும் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கெளரவிப்பது வழக்கம். அவ்வகையில், லண்டனில் 2023 ஆம் ஆண்டுக்கான பிபா-வின் சிறந்த விருதுகள் வழங்கும் விழா நடந்துள்ளது.

இதில் சிறந்த வீரர் விருதை பெறுபவர் யார் என்பதில் மெஸ்ஸிக்கும், எர்லிங் ஹாலண்ட்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இருவருமே 48 புள்ளிகளுடன் சமமான நிலையில் இருந்தனர். ஆனால், அதிக தேசிய அணியின் கேப்டன்கள் லியோனல் மெஸ்ஸிக்கு வாக்களித்ததால் அவரே விருத்தினைத் தட்டிச் சென்றார்.

அதேபோல், 2023ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக ஸ்பெயினின் ஐடனா பொன்மதி தேர்வு செயப்பட்டுள்ளார். மேலும், சிறந்த அணியின் மேலாளர் விருதை மன்செஸ்டர் சிட்டி சேர்ந்த பெப் கார்டியோலா வென்றார். அதுமட்டுமில்லாமல், இங்கிலாந்து மகளிர் அணியின் நெதர்லாந்தைச் சேர்ந்த பயிற்சியாளர் Sarina Wiegman, பெண்களுக்கான ‘தி பெஸ்ட்’ பயிற்சியாளர் விருதை வென்றுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!