Latestமலேசியா

நஜீப்பை போல் இந்தியச் சமூகத்துக்கு செய்த பிரதமர் வேறெவரும் இல்லை; கமலநாதன் நெகிழ்ச்சி

ஜோர்ஜ்டவுன், மே-11 – டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு முன்பும் பின்பும், அவரைப் போல இந்தியச் சமூகத்துக்கு நன்மை செய்த பிரதமர் ஒருவருமில்லை.

ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் பி.கமலநாதன் அதனை நினைவு கூர்ந்தார்.

இந்தியச் சமூகத்தின் நலன்களை மனதில் கொண்டிருந்தது, அவரின் நடவடிக்கைகளில் வெளிப்பட்டதாக, நஜீப் அரசாங்கத்தில் கல்வி துணையமைச்சராக இருந்த கமலநாதன் சொன்னார்.

2009 முதல் 2018 வரை பிரதமராக இருந்த சமயத்தில், தமிழ்ப்பள்ளிகளை தரமுயர்த்த சுமார் 1 பில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியவர் நஜீப்.

தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு கூடுதல் நிதியை ஒதுக்க அவர் என்றுமே மறுத்ததில்லை என கமலநாதன் புகழாரம் சூட்டினார்.

50 தமிழ்ப் பாலர் பள்ளிகளின் நிர்மாணிப்புக்காக 2016-ல் தாம் வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, அடுத்து வந்த பட்ஜெட்டிலேயே அந்த ஒதுக்கீட்டை நஜீப் அறிவித்தவராவார்.

இது தவிர, அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களின் சேர்க்கையை 1,500-ரிலிருந்து 2,200 பேராக அதிகரித்தவர்.

“நஜீப்பை போல் இன்னொரு பிரதமரை நீங்கள் காண முடியாது” என உலு சிலாங்கூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கமலநாதன் சொன்னார்.

ஊழல் வழக்கில் தண்டனைப் பெற்று சிறையிலிருக்கும் நஜீப்புக்கு அரச மன்னிப்பு வழங்க, மற்ற இனங்களை விட இந்தியச் சமூகமே அதிக ஆதரவளிப்பதாக, ஒரு கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

தனது பதவி காலத்தில் இந்தியர்களுக்கு நஜீப் ஆற்றிய சேவைக்கு இன்னமும் அச்சமூகம் விசுவாசமாக இருப்பதாகக் கூறப்படுவது தொடர்பில், FMT-யிடம் கமநாதன் கருத்துரைத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!