
பட்டர்வொர்த், ஜூன் 3 – இன்று அதிகாலையில், வடக்கு நோக்கி செல்லும் ஜூரு டோலில், செம்பனை எண்ணெய் ஏற்றி சென்ற லாரி ஒன்று, அங்குள்ள உலோகத் தடுப்புடன் மோதியதில் சுமார் 500 லிட்டர் எண்ணெய் சாலையில் கசிந்தது.
அச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையென்றும், எண்ணெய் கசிவுகளைக் கட்டுப்படுத்தவும் துப்புறப்படுத்தவும் தீயணைப்பு துறையினரால் அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதென்றும் பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் (John Sagun Francis) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கசிவை அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதோடு, அவ்வழியாக பயணிக்கும் வாகனமோட்டிகள் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.