Latestமலேசியா

அம்பாங் ஜெயாவில் கூரை வழியாக உள்ளே புகுந்த கொள்ளையனிடம் தம்பதியர் நகைகள், ரொக்க தொகையை இழந்தனர்

கோலாலம்பூர், ஜன 15 – அம்பாங் ஜெயாவில்  கூரை வழியாக ஒரு வீட்டிற்குள் புகுந்த  கொள்ளையனிடம் 7,000 ரிங்கிட் மதிப்புள்ள நகைகள் மற்றும்  2,500  ரிங்கிட் ரொக்கத் தொகையையும் ஒரு தம்பதியர் இழந்தனர்.  அந்த வீட்டில் இருந்த  ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளியில் கொள்ளையன் கூரையில் இருந்ததை காணமுடிந்ததாக அம்பாங் ஜெயா போலீஸ் தலைவர் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார். சனிக்கிழமை  காலை மணி 10 அளவில் அந்த கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.  

ஜாலான் அம்பாங்கிற்கு அருகே வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் அந்த தம்பதியர் வீட்டிற்கு திரும்பிவந்தபோது அங்குள்ள அறை மற்றும் வரவேற்பறையில் பொருட்கள் அனைத்தும்  அலங்கோலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  அதோடு தங்களது வீட்டில் நிகழ்ந்த கொள்ளையினால் நகை மற்றும் ரொக்கம் உட்பட 9,500 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாக  அந்த தம்பதியர் போலீசில் புகார் செய்துள்ளர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!