Latestமலேசியா

Hutan Tupah காட்டில் மழையில் சிக்கிக் கொண்ட நால்வர் மீட்பு

சுங்கை பட்டாணி, செப்டம்பர்-13 – கெடா, சுங்கை பட்டாணி Hutan Tupah காட்டில் மலையேறிய 4 ஆடவர்கள் கனமழையால் மேலேயே சிக்கிக் கொண்டனர்.

நேற்று காலை 6.30 மணிக்கு மலையேறியவர்கள் இரவு 7 மணியாகியும் கீழே வராததால் குடும்பத்தார் கவலையுற்றனர்.

பின்னர் போலீஸிலும் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து இரவு 10.50 மணியளவில் தீயணைப்பு-மீட்புத் துறை மலையில் தேடல் பணியைத் தொடங்கியது.

எனினும் மோசமான வானிலையால் நள்ளிரவு வாக்கில் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

ஒருவழியாக அதிகாலை 4.30 மணிக்கு அந்நால்வரும் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக கீழே கொண்டு வரப்பட்டதாக குவால மூடா போலீஸ் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!