
பாசிர் மாஸ் – மே 22 – பாசீர் மாஸ் அலோர் பாசிர் ,
Kampung Lumpur ரில் வயதான பெண்மணி ஒருவர் கிணற்றில் விழுந்து இறந்து கிடந்தார். பொதுமக்களிடமிருந்து அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சென்றதாக வக்காப் பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கை அதிகாரி முகமட் ஸைன் அபு ஹசான் தெரிவித்தார்.
அஸ்மா ஹசின் என்று அடையாளம் கூறப்பபட்ட 79 வயது பெண்மணி கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டதோடு , பொதுமக்களின் உதவியோடு அவர் கிணற்றின் மேற்பகுதிக்கு கொண்டுவரப்பட்டார். அவர் மரணம் அடைந்ததை சமபவத்திற்கு வந்த மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.