Latestமலேசியா

அமெரிக்க நகை கடையில் USD1.3 மில்லியன் நகைகள் கொள்ளை

சிகாகோ, அமெரிக்கா, ஜூன் 7 – கடந்த மே 9ஆம் தேதி, சிக்காகோவிலுள்ள நகை கடையொன்றில் 1.3 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நகைகளைக் கொள்ளையடித்துள்ளதாக, அக்கடையின் உரிமையாளர் கூறியுள்ளார்.

திட்டமிட்டபடி மேற்கொண்ட இத்திருட்டில், 1000க்கும் அதிகமான நகைகள் அதாவது அக்கடையின் மொத்த இருப்பில் 90 விழுக்காட்டு நகைகளை அவ்வாடவர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நகைகள் வைத்திருந்த பெட்டியை சரியாக அடையாளம் கண்டு, இரம்பத்தால் வெட்டி நகைகளை கொள்ளையடித்துள்ள நிலையில் நிச்சயம் நன்கு அறிந்தவர்கள் திருடர்களுக்கு வழிகாட்டியிருக்க வேண்டுமென்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த மே 26ஆம் தேதி, மற்றொரு மிட்டாய் கடையும் கொள்ளையடிக்கப்பட்டுளதைத் தொடர்ந்து, அவ்விரு திருட்டுகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!