
பாலிங், மே 27 – பாலிங், கம்போங் Tebing Tinggi திங்கள்கிழமை மாலை ரப்பர் தோட்டத்தில் ஆடுகளின் கூட்டத்தைத் தொடர்ந்து சென்ற சுமார் 90 கிலோகிராம் எடையுள்ள Batik மலைப்பாம்பு ஒன்று காணப்பட்டதைக் கண்டு அங்குள்ள மக்கள் அதிர்ச்சியடைந்தனர். கிராமவாசி ஒருவரிடமிருந்து அழைப்பு வந்ததைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற தங்களது குழுவினர் அந்த மலைப்பாம்பை பிடித்ததாக மலேசிய பொது தற்காப்புப் படையின் பாலிங் அதிகாரி, முகமட் பைசோல் அப்துல் அஜீஸ், ( Mohd Faizol Ab Aziz ) தெரிவித்தார்.
ஆடுகளின் கூட்டத்தைப் பின்தொடர்ந்து ஒரு பெரிய மற்றும் நீளமான மலைப்பாம்பு காணப்பட்டதால் அதன் தொடர்பில் கால்நடை உரிமையாளரின் விரைவான நடவடிக்கையால், தேவையற்ற சம்பவங்கள் எதுவும் நடக்காமல் தடுக்க முடிந்தது. நாங்கள் அங்கு சென்றபோது, ஆடு வளர்ப்புப் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் சுமார் 90 கிலோகிராம் எடையும் சுமார் ஐந்து மீட்டர் நீளமும் கொண்ட ஒரு மலைப்பாம்பைக் கண்டோம்.
சுமார் 30 நிமிடங்களில் எந்த சிரமமும் இல்லாமல் அந்த மலைப்பாம்பை பிடிக்கும் நடடிக்கை வெற்றிகரமாக முடிந்ததாக அவர் கூறினார்.