Latestஅமெரிக்காஉலகம்சிங்கப்பூர்

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் கணவரின் சிறுநீரகத்தை விற்க வைத்து, பணத்துடன் காதலனுடன் ஓடிய பெண்

கொல்கத்தா, பிப்ரவரி-4 – இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பெண்ணொருவர் சிறுநீரகத்தை விற்குமாறு கணவரை வற்புறுத்தி, கடைசியில் அந்தப் பணத்தோடு காதலனுடன் கம்பி நீட்டினார்.

மகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக பணம் சேமிக்க வேண்டுமெனக் கூறி, 10 லட்சம் ரூபாய்க்கு சிறுநீரகத்தை விற்குமாறு கணவருக்கு அவர் அழுத்தம் கொடுத்து வந்துள்ளார்.

மனைவியின் நச்சரிப்பால் கணவரும் ஒரு கட்டத்தில் தனது சிறுநீரகத்தை விற்க ஒப்புக் கொண்டார்.

எப்படியோ, கிடைக்கும் பணத்தை வைத்து குடும்பத்தைக் கரையேற்றி விடலாமென அவருக்கு நம்பிக்கை.

இந்நிலையில், ஒரு வருட காத்திருப்புக்குப் பிறகு சுமார் 3  மாதங்களுக்கு முன்பு ஒருவழியாக உடலுறுப்பு வாங்குவோரை அவர்கள் கண்டுபிடித்தனர்.

அறுவை சிகிச்சையும் முடிந்து விட்டது; ஆனால் அதன் பிறகு தான் கணவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது சிறுநீரகத்தை விற்று கிடைத்த 10 லட்சம் ரூபாயோடு மனைவி தனது கள்ளக் காதலனுடன் ஓடி விட்டார்.

Facebook-கில் அறிமுகமாகி, நாளடைவில் இருவரும் காதலில் விழுந்துள்ளனர்.

காதலனுடன் செல்வதற்காகவே, திட்டமிட்டு கணவரின் சிறுநீரகத்தை அவர் விற்கச் செய்துள்ளார்.

விஷயம் தெரிந்த கணவர் போலீஸில் புகார் அளிக்கவே இருவரையும் போலீஸ் தீவிரமாகத் தேடி வருகிறது.

இந்தியாவில் மனித உறுப்புகள் விற்பனை செய்வது சட்ட விரோதமாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!