
கோலாலம்பூர், பிப் 13 – மலேசியா தற்போது வடகிழக்கு பருவமழையின் இறுதி கட்டத்தில் இருப்பதால் இது 2025 மார்ச் நடுப்பகுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, வானிலை வழக்கத்தை விட வெப்பமாகவும் வறட்சியாகவும் இருக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையமான Met Malaysiaவின் தலைமை இயக்குனர் Mohd Hisham Mohd Anip தெரிவித்தார்.
குறிப்பாக தீபகற்பத்தின் வட பகுதிகளான பேராக், பகாங் மற்றும் கிளந்தான் போன்ற இடங்களில் மேக மூட்டம் மற்றும் மழைப்பொழிவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட காலத்திற்கு மழை இல்லாததால், பகலில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் (35°C ) மேல் உயரும். பிப்ரவரி 11 ஆம் தேதியன்று 36.1 டிகிரி செல்சியஸ் (36.1°C) வெப்பநிலையுடன், கெடாவின் பாலிங் (Baling) Felda Teloi Kanan னில் இதுவரை அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் முகமட் ஹிஷாம் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் மே மாதம்வரை இந்த நிலை தொடர்ந்தாலும் இம்முறை 2024 ஆம் ஆண்டைப் போல மோசமாக இருக்காது என்றும் அவர் விளக்கினார்.
La Nina வின் பாதிப்பு இம்முறை பலவீனமாகவே இருக்கும் என்பதால் கடந்த ஆண்டைவிட வெப்ப நிலை மோசமாக இருக்காது. இந்த காலக்கட்டத்தில் வெப்ப அலை மற்றும் புகை மூட்டம் ஏற்படும் சாத்தியம் இருப்பதையும் வானிலைத்துறை எச்சரித்துள்ளது.