
கோலாலம்பூர், மே 16 – 800க்கும் மேற்பட்ட பாதுகாக்கப்பட்ட காட்டுப் பறவைகளை சட்டவிரோதமாக வைத்திருந்து மற்றும் விற்பனை செய்ததற்காக ஒரு தம்பதியரான கணவன் ,மனைவி கைது செய்யப்பட்டனர்.
Ciak Tempua என்ற பறவை ஒவ்வொன்றும் 25 ரிங்கிட்டிற்கு விற்பனை செய்ததைத் தொடர்ந்து அந்த தம்பதியரின் நடவடிக்கை கண்டறியப்பட்டது.
பெர்ஹிலித்தான் வனவிலங்கு குற்றப் பிரிவு தலைமையிலான கசானா ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம், போலீஸ் மற்றும் பொது நடவடிக்கை பிரிவு இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக பெர்ஹிலித்தான் தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் காதிர் அபு ஹாஷிம் (Abdul Kadir Abu Hashim ) தெரிவித்தார்.
பெர்ஹிலித்தான் அதிகாரி செலஸ்கோரியானோ ரசோண்ட் ( Celescoriano Razond) தலைமையில் நேற்று காலை மணி 8.50 அளவில் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலத்தின் பகுதியில் அமைந்துள்ள ஒரு கடையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது விசாரணைக்காக 40 மற்றும் 50 வயதுடைய கணவன் மனைவி கைது செய்யப்பட்டனர்.
அங்கிருந்த 840 Tiak Cempua பறவைகள் இந்நாட்டில் பாதுகாக்கப்பட்ட பறவைகள் என பட்டியலில் இடம்பெற்றவையாகும். மேலும் அந்த நடவடிக்கையின்போது மடிந்த 10 Tiak Cempua பறவைகளும் கண்டுப்பிடிக்கப்பட்டன.
அனைத்து பறவைகளும் பல்வேறு அளவுகளைக் கொண்ட இரும்பினால் செய்யப்பட்ட 16 கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்தாக Abdul Kadir கூறினார். 30 ,000 ரிங்கிட் மதிப்புள்ள அனைத்து பறவைகளும் பறிமுதல் செய்யப்பட்டு, சிலாங்கூர் Sungai Tengi யிலுள்ள பறவைகள் வளர்ப்பு மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட தம்பதியர் 10,000 ரிங்கிட் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.