
கோலாக் கிராய், மே 9 – Pangkalan Pasir Kelangகில் நேற்று ferry யில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று Sungai Kelantan ஆற்றில் விழுந்ததைத் தொடர்ந்து அதிலிருந்த 60 வயது பெண் மயிரிழையில் உயிர் தப்பினார்.
காலை 11 மணியளவில் நடந்த அந்த சம்பவத்தின்போது அப்பெண்ணின் கணவர் ferry கட்டணத்தைச் செலுத்துவதற்காகக் காத்திருந்தார்.
அப்போது அந்த பெண் அமர்ந்திருந்த புரோட்டோன் சகா கார் திடீரென முன்னோக்கி நகர்ந்ததால் அதனை கண்ட அவரது கனவர் தனது மனைவியின் மீது கயிற்றை வீசினார். சரியான நேரத்தில் காரின் கதவைத் திறக்க முடிந்ததால் அப்பெண் உயிர் தப்பினார்.
அப்பெண்ணுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் நடந்து சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு கார் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது.
Pengkalan Pasir kelang கில் பெர்ரி சேவை தொடங்கிய பல ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக இச்சம்பவம் நடந்ததாக Pasir kelang பெர்ரி தலைவர் முகமட் ஜபார் (Mohamad Jaafar ) கூறினார்.
கணவர் வெளியே வந்த பிறகு, அந்தப் பெண் தற்செயலாக Auto கியரை நியூட்ரலுக்கு மாற்றியபோது அக்கார் முன்னே நகர்ந்ததாக கூறப்படுகிறது.
அந்தப் பெண் காருடன் சேர்ந்து ஆற்றில் விழுவதைத் தடுக்க பொதுமக்களும் விரைந்து வந்து உதவ முயன்றதாக முகமட் ஜபார் தெரிவித்தார்