Latestஉலகம்

குடிமக்கள் திருமணம் செய்வதை ஊக்குவிக்க 14,700 டாலரைத் தரும் தென் கொரியா

சியோல், மே-24 – பிறப்பு விகிதம் கடுமையாக சரிந்துள்ள தென் கொரிவில், அப்பிரச்னையைக் கையாள அந்நாட்டரசு வித்தியாசமான அணுகுமுறையில் இறங்கியுள்ளது.

அதாவது திருமணம் செய்துகொள்ளும் ஜோடிகளுக்கு ரொக்க உதவிகள் வழங்கப்படுகின்றன.

அதுவும் எப்படி? திருமண நிச்சயதார்த்தம் தொடங்கி, திருமணம், தேனிலவு வரைக்குமான செலவுகளை அரசாங்கமே ஏற்றுக் கொள்கிறது.

மக்கள் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே அதன் நோக்கம்.

பிறப்புக் விகிதக் குறைவால் இதற்கு முன், ஊராட்சி மன்றங்கள் பிரசவ மானியங்களை அமுல்படுத்தியிருந்தன.

இப்போது, அடுத்தக் கட்டமாக இந்த ரொக்க உதவித் திட்டத்தை சியோல் செயல்படுத்துகிறது.

பூசான் மாவட்டத்தில் ஊராட்சி மன்றமே ஏற்பாடு செய்த சுயம்வரம் நிகழ்ச்சியில் பங்கெடுத்தோர், திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் 14,700 டாலர் வரை வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது.

பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவதைத் தடுக்க இதுவும் ஒரு முயற்சி என மாவட்ட அதிகாரி கூறினார்.

உலகிலேயே மிக மோசமான பிறப்பு விகிதத்தைத் தென் கொரியா கொண்டுள்ளது.

அங்கு 2023-ரில் 0.72-ராக இருந்த பிறப்பு விகிதம் கடந்தாண்டு சற்றே ஏற்றம் கண்டு 0.75-தாகப் பதிவாகியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!