
கூச்சிங், ஏப்ரல்-27- சரவாக் கூச்சிங்கில் வாகனமோட்டும் போது துப்பாக்கிச் சூடு பட்டு 34 வயது ஆடவர் உயிரிழந்தார்.
Jalan Stephen Yong Kuching சாலையில் சனிக்கிழமைக் அதிகாலை 5.30 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.
தலையில் சூடு பட்ட காயத்துடன் காரினுள் விழுந்துக் கிடந்தவரைக் கண்டு, அவரின் 2 நண்பர்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து குற்றவியல் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுவதாக, படாவான் மாவட்ட போலீஸ் கூறியது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல்களைக் கொடுத்து விசாரணைக்கு உதவுமாறும் போலீஸ் கேட்டுக் கொண்டது.