Latestவிளையாட்டு

சபாவை 5-0 என தோற்கடித்து FA கிண்ணத்தைத் தற்காத்துக் கொண்ட JDT; ஜோகூரில் இன்று சிறப்பு விடுமுறை

புக்கிட் ஜாலில், டிசம்பர்-15 – மலேசிய FA கிண்ணத்தை தொடர்ந்து நான்காவது முறையாக வாகைச் சூடி, JDT வரலாறு படைத்துள்ளது.

புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் நேற்றிரவு நடைபெற்ற இறுதியாட்டத்தில் Sabah FC அணியை, JDT மிக எளிதாக 5-0 என தோற்கடித்தது.

ஆட்டம் தொடங்கியது முதலே JDT-யின் கையே ஓங்கியிருந்த நிலையில், Jonathan Silva, Jairo da Silva, Oscar Aribas மற்றும் Manuel Hidalgo ஆகியோர் அவ்வணிக்கான கோல்களைப் புகுத்தினர்.

JDT-யின் அதிரடித் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் Sabah FC திணறியது.

இதே கடந்தாண்டு இறுதியாட்டத்தில் Selangor FC அணியை JDT 6-1 என படுதோல்வி அடையச் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மகத்தான வெற்றியைக் கொண்டாடும் வகையில், இன்று டிசம்பர் 15-ஆம் தேதி ஜோகூரில் சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் அவர்களின் ஆணைக்கிணங்க, அவ்விடுமுறை வழங்கப்படுவதாக, இறுதியாட்டத்திற்குப் பிறகு மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் கா’சி (Onn Hafiz Ghazi) அறிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!