
கோலாலம்பூர், மே 7 – சாலையில் வாகனமோட்டிகளின் பாதுகாப்புக்கு மருட்டலாக இருந்த ஒரு குழியை அடையாளம் கண்ட ஒரு மோட்டாரோட்டி மற்றும் அதற்கு உடனடி தீர்வு கண்ட போக்குவரத்து போலிசாரின் காணொளி ஒன்று வைரலாகி வலைத்தளவாசிகளின் பாராட்டை குவித்து வருகிறது.
கோலாலம்பூர் ,பிரின்ஸ் கோர்ட் (Prince Court ) மருத்துவ மையத்திற்கு அருகிலுள்ள ஜாலான் Conlayயில் ஆழமான குழி ஒன்றைக் கண்டுள்ளார் Akmar Anas எனும் மோட்டாரோட்டி ஒருவர். சாதாரணமாக பார்ப்பதற்கு அந்த குழி கண்களுக்கு தெரியவில்லை. ஆனால், நன்றால அருகில் சென்று பார்த்தால்தான் தெரிகிறது அது ஆழமான குழியென்று. இதை படம் எடுத்து மக்களை எச்சரிக்கலாம என்றெண்ணிய அக்மாரின் செயலை அவ்வழியே சென்ற போக்குவரத்து போலிஸ் அதிகாரி காண, அவருக் அருகில் வந்து வினவியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மற்ற வாகன ஓட்டுனர்களை எச்சரிக்கவும், விபத்துகளைத் தடுக்கவும் , போக்குவரத்து போலீஸ்காரர் தற்காலிகமாக அந்த குழிமீது உடனடியாக ஒரு பிளாஸ்டிக் தடுப்பை எடுத்து வைத்திருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து மைஜாலன் கேகேஆர் (MyJalan KKR ) செயலியிலும் இது குறித்து புகார் செய்துள்ளனர்.
இதனிடையே, தான் கண்ட குழியை பிறருக்கு என்ன நடந்தால் என சுயநலம் பாராமல் வந்து பார்த்த அக்மாருக்கும், மக்களை பாதுகாக்க குறைந்தபட்சம் தன் வரம்புக்கு உட்பட்ட உடனடி முடிவையும் வழங்கிய அந்த போக்குவரத்து போலிசாரின் செயல் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது