
கோலாலம்பூர், அக்டோபர் 7 – மின்சாரக் கட்டணம் மறுசீரமைப்பு, டீசல் உதவித்தொகை முறைப்படுத்துதல் ஆகியவை மக்களுக்குத் சுமையை ஏற்படுத்தும் வகையில், செயல்படுத்தப்படவில்லை என்று பிரதமர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையிலிருந்து சேமிக்கப்பட்ட பில்லியன் கணக்கான ரிங்கிட், இப்போது மற்ற உதவித் தொகைகளின் வாயிலாக மக்களிடமே திருப்பி பகிர்ந்தளிக்கப்படுகிறது என்றார் அவர்.
சீர்திருத்தப் பயணத்தில் அரசாங்கம் இதனை துணிச்சலாகச் செய்து வருகிறது; இதனை அரசாங்கம் தொடர்ந்து செய்யும் என்று Khazanah Megatrend கருத்தரங்கைத் தொடக்கி வைக்கும் முன் பிரதமர் இதனைக் கூறினார்.
முறையான நிர்வாகம், பொறுப்பேற்பு மற்றும் சமூக நீதி ஆகிய அம்சங்களில் உறுதி பூண்டுள்ள அரசாங்கம், நாட்டின் வளர்ச்சியினால் விளையும் நன்மைகள் நியாயமாகவும் சமமாகவும் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதிசெய்வதோடு ஒவ்வொரு மலேசியரும் வெற்றிபெற வாய்ப்பளிக்கிறது என்றும் அன்வார் கூறினார்.