Latestமலேசியா

செம்பனை தோட்டத்தில் மனித எலும்புக்கூடு கண்டுப்பிடிப்பு

சிலிம்ரீவர், மே 8 – சிலிம்ரீவர் , ஜாலான்  கோலாசிலிம் , Bukit Besut செம்பனை தோட்டத்தில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.

இது தொடர்பான விசாரணையில் உதவ குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் அல்லது நண்பர்களை இழந்த பொதுமக்கள் தகவல் வழங்க முன்வருமாறு Muallim மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan முகமட் ஹஸ்னி கேட்டுக் கொண்டார். பாதிக்கப்பட்டவரை அடையாளம் காண்பதற்காக தற்போது விசாரணை நடத்தப்படுகிறது.

செம்பனை தோட்டத்திற்கு அருகிலுள்ள தனது தோட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த பொதுமக்களில் ஒருவரால் இந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 5.13 மணியளவில் பொதுமக்களிடமிருந்து மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசிற்கு தகவல் கிடைத்தது. அந்த மனித எலும்புக் கூட்டில் இரண்டு கைகளும் காணப்படவில்லை. அந்த எலும்புக்கூடு தடயயியல் பரிசோதனைக்காக ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!