
பூச்சோங், ஜூன் 6 – நேற்று, பூச்சோங்கில் 16 மற்றும் 4 வயதுடைய தனது இரண்டு மகள்களைக் கொடுமைப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் அவர்களின் தாயாரும், தாயாரின் காதலனும் காவல்துறையினரால் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்மாதுவின், மூத்த மகள் தப்பித்து, அக்கம் பக்கத்தில் உள்ளோரிடம் உதவி கேட்ட பிறகுதான், 37 மற்றும் 42 வயதுடைய அவ்விரு சந்தேக நபர்களின் கொடுரச் செயல்கள் வெளியுலகத்திற்கு அம்பலமாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட அவ்விருவருக்கும் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், அந்த ஆடவன் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் இதற்கு முன்னதாக அந்நபர் 8 போதைப்பொருள் தொடர்பான குற்றப் பதிவுகளை கொண்டிருப்பதும் அறியப்பட்டுள்ளதென்று போலீசார் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் விசாரணைக்காக இரண்டு சந்தேக நபர்களும் நேற்று முதல் ஜூன் 10ஆம் தேதி வரை தொடர்ந்து 6 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.