Latestமலேசியா

ஜோகூர் பாருவில் கனமழையும் வீசியப் புயல் காற்றால் வேரோடு சாய்ந்த மரம்; 15 வாகனங்கள் சேதம்

ஜோகூர் பாரு, பிப்ரவரி-15 – ஜோகூர் பாரு, தாமான் பெலாங்கி, ஜாலான் கூனிங்கில் நேற்று மாலை பெரிய மரமொன்று வேரோடு சாய்ந்து விழுந்ததில், 15 வாகனங்கள் சேதமுற்றன.

இரு வணிகத் தளங்களும் அதில் பாதிக்கப்பட்டன.

சுமார் 1 மணி நேரத்திற்கு பெய்த கனமழையும் வீசியப் புயல் காற்றுமே மரம் சாய்ந்ததற்கு காரணம் என, மாநில தீயணைப்பு-மீட்புக் குழு தெரிவித்தது.

மாலை 5 மணியளவில் தகவல் கிடைத்து, 10 பேர் கொண்ட குழு சம்பவ இடம் விரைந்தது.

மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி, அக்குழு வாகனங்களை மீட்டது.

அச்சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தீயணைப்புத் துறை உறுதிப்படுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!