Latestஇந்தியாஉலகம்

திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை; புதியத் தலைவர் அறிவிப்பு

திருப்பதி, நவம்பர்-2, திருப்பதி, திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் இந்துக்களாக இருக்க வேண்டுமென புதியக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் புதியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பி.ஆர்.நாயுடு அந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே பணியிலிருக்கும் இந்து அல்லாத ஊழியர்களின் நிலை குறித்து, ஆந்திர அரசுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படுமென்றார் அவர்.

கோயிலில் பணியாற்றும் மாற்று மதத்தினரை நீக்குவதென்பது மிகவும் சிரமமான முடிவாகும்.

என்றாலும் இந்த முடிவை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

திருப்பதி லட்டு சர்ச்சைக்குப் பிறகு, இந்த உத்தரவு புதிய விவாதத்தைக் கிளப்புமென எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!