Latestமலேசியா

தீயில் பாதிக்கப்பட்ட ஸ்தாப்பாக் உயர் நிலைப் பள்ளிக்கு உடனடி நிதியுதவி; ஃபாட்லீனா அறிவிப்பு

கோலாலம்பூர், ஏப்ரல்-29, கோலாலம்பூர் ஸ்தாப்பாக் தேசிய உயர் நிலைப் பள்ளிக்கு உடனடி நிதியுதவி வழங்கப்படுமென, கல்வி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

அப்பள்ளியின் மாணவர் தங்கும் விடுதியின் ஒரு புளோக் கட்டடம் நேற்றிரவு தீக்கிரையானதை அடுத்து ஃபாட்லீனா சிடேக் அவ்வாறு சொன்னார்.

தற்போதைக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பே முக்கியமென, இன்று அப்பள்ளிக்கு வருகை மேற்கொண்டு நிலவரங்களைப் பார்வையிட்ட பிறகு ஃபாட்லீனா கூறினார்.

இரவு 8.45 மணிக்கு ஏற்பட்ட அச்சம்பவத்தில், 91 ஆண் மாணவர்கள் தங்கியிருந்த புளோக் தீயில் அழிந்தது.

எனினும், அப்போது அனைத்து மாணவர்களும் பள்ளிவாசல் சென்றிருந்ததால், தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.

தங்கும் விடுதி கட்டடத்தின் 80 விழுக்காட்டுப் பகுதி தீயில் அழிந்துபோனதாக, தீயணைப்பு – மீட்புத் துறை கூறியது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!