Latest
பட்டர்வெர்த்தில், தூய்மையற்ற நிலையில் நாசி கண்டார் உணவகத்தை மூட உத்தரவு!

பட்டர்வெர்த், மே 16 – நேற்று, செபராங் பிறை ஊராட்சி மன்றமான MBSP, வடக்கு செபராங் பிறை மாவட்ட சுகாதார அலுவலகத்துடன் (PKD) இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சுகாதாரமற்ற சூழலில் இயங்கி வந்த நாசி கண்டார் உணவகம் ஒன்று மூடப்பட்டது.
அவ்வுணவகத்தின் தூய்மையற்ற சூழலுக்காகவும், விசா மற்றும் தகுந்த ஆவணங்களற்ற வெளிநாட்டு தொழிலார்களை உணவகத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டதற்காகவும் சுமார் 4,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை உணவு வளாகங்களில் தூய்மை மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டுவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதியாக இருப்பதைக் காட்டுகிறது.
இதனிடையே, அனைத்து உணவகங்களும் தங்களின் வளாகம் எப்போதும் சுத்தமாக மற்றும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிச் செய்வதோடு சட்டத்திட்டங்களுக்கு இணங்கி இருக்க வேண்டுமென்று MBSP கேட்டுக் கொண்டுள்ளது.