மலேசியா
பத்து பஹாட் கரையோரத்தில் வலுவற்ற நிலநடுக்கம்

பத்து பஹாட், மார்ச்-15,
ஜோகூர், பத்து பஹாட் கரையோரத்தில் நேற்று மாலை 6 மணிக்கு சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
பத்து பஹாட் நகரிலிருந்து 22 கிலோ மீட்டர் தென்மேற்கே ரிக்டர் அளவைக் கருவியில் 3.2-டாக அது பதிவாகியது.
சிறிய அதிர்வு உணரப்பட்ட போதும், சேதம் எதுவும் இல்லை.
இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.
மக்கள் நிதானம் காக்குமாறும், உணரப்பட்ட அதிர்வுகளை MetMalaysia-க்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.



