
பலாக்கோங், மார்ச்-15-சிலாங்கூர், பலாக்கோங், தாமான் செராஸ் ஜெயாவில் நேற்றிரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 4 தொழிற்சாலைகள் அழிந்தன.
ஒரு தொழிற்சாலை முழுமையாக எரிந்துபோனது; மற்ற 3 தொழிற்சாலைகள் 50 முதல் 90 விழுக்காடு வரை சேதமடைந்தன.
இரவு 9.24 மணிக்கு அவசர அழைப்பு வந்ததும், 7 தீயணைப்பு நிலையங்களிலிருந்து வீரர்கள் சம்பவ இடம் விரைந்தனர்.
தீ பரவலைக் கண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதால், 10.18 மணிக்குள் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.



