Latestமலேசியா

பாசீர் மாஸில் சொந்த மகனையே கத்தியால் குத்தியயத் தந்தை 7 நாட்கள் தடுத்து வைப்பு

பாசீர் மாஸ், மே-3 – கிளந்தான், பாசீர் மாஸில் நேற்று சொந்த மகனையே கத்தியால் குத்திக் காயப்படுத்திய தந்தை, விசாரணைக்காக இன்று முதல் 7 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கோத்தா பாரு மேஜிஸ்திரேட் நீதிமன்றம் அவ்வுத்தரவைப் பிறப்பித்தது.

கொலை முயற்சி தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்க ஏதுவாக 47 வயது அந்த ஆசிரியர் தடுத்து வைக்கப்பட்டார்.

முன்னதாக கம்போங் பங்கோல் சே டோலில் காய்கறி வெட்டும் கத்தியால் அவ்வாடவர் 2 முறை குத்தியதில், 11 வயது மகன் நெஞ்சிலும் வயிற்றிலும் படுகாயமடைந்தான்.

அச்சிறுவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

மனைவியுடன் மூன்றாவது முறையாக விவாகரத்துப் பெறும் முயற்சியிலிருக்கும் அந்த ஆசிரியர், மன அழுத்தத்தில் மகனென்றும் பாராமல் அவ்வாறு நடந்துகொண்டது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!