Latest

பேராக்கில் RM27,742 மதிப்பிலான போலி கைப்பேசி உபகரணங்கள் பறிமுதல்

ஈப்போ, நவம்பர் 4 – பேராக் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட நான்கு தனித்தனி சோதனைகளில், உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்வாதார அமைச்சு (KPDN), 27,742 ரிங்கிட் மதிப்பிலான போலி கைப்பேசி உபகரணங்களைப் பறிமுதல் செய்தது.

பிரபல பிராண்டுகளின் கைப்பேசி உபகரணங்கள் போலியாக விற்கப்படுவது தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றவுடனேயே ஈப்போ, மஞ்சுங், பாரிட் புந்தார் மற்றும் தைப்பிங் ஆகிய நான்கு இடங்களில் உள்ள வணிக வளாகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன என்று பேராக் மாநில KPDN இயக்குநர் டத்தோ கமாலுடின் இஸ்மாயில் (Datuk Kamalludin Ismail) தெரிவித்தார்.

913 கைப்பேசி உபகரணங்களான சார்ஜர்கள், கேபிள்கள், காதணிகள் மற்றும் பிற சாதனங்களும், பிரபல வணிகக் குறியீடுகளை தவறாகப் பயன்படுத்தியதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த நிறுவனத்தின் பிரதிநிதிகள், பொருட்களைச் சரிபார்த்ததில், அவை உண்மையிலேயே போலியானவை என உறுதி செய்யப்பட்டது.

அனைத்து பொருட்களும் மற்றும் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இக்குற்றத்தை வணிகக் குறியீடு சட்டத்தின் கீழ் விசாரித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!