Latestமலேசியா

போதைப்பொருள் மயக்கம்; செந்தூலில் 10வது மாடியிலிருந்து குதிக்கப் போவதாக மிரட்டிய வெளிநாட்டு ஆடவன்

செந்தூல், மார்ச்-18 – தலைநகர், பண்டார் பாரு செந்தூலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10-ஆவது மாடியிலிருந்து குதிக்கப் போவதாக, நேற்று மாலை 27 வயது வெளிநாட்டு ஆடவன் மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீ பேராக் அடுக்குமாடியில் மாலை 5 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

10-ஆவது மாடியில் உள்ள வீட்டொன்றின் கண்ணாடிகளுக்கு வெளியே மயிர்கூச்செரியும் உயரத்தில் அவன் நின்றுக் கொண்டிருந்தான்.

நுனிப்பகுதியில் நின்றபடி கைகளால் கண்ணாடிகளை உடைத்தும் முரட்டுத்தனமாகவும் அவன் நடந்து கொண்டதைக் கண்டு பொது மக்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.

உடனடியாக வந்து சேர்ந்த அதிகாரத் தரப்பு அவ்வாடவனை பாதுகாப்பாக மீட்டது.

போதைப்பொருள் மயக்கத்தில் இருந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுவதாக, செந்தூல் போலீஸ் தலைவர் சுகார்னோ சஹாரி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!