Latestமலேசியா

மற்றவரின் கணவருடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் ஆசிரியை தற்காலிகமாக இடை நீக்கம்

நிபோங் தெபால், மே 28 – மலாக்காவில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியை, மற்றொரு பெண்ணின் கணவருடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறப்படும் சர்ச்சையைத் தொடர்ந்து, கற்பித்தல் பணிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும், அந்தப் பெண் ஆசிரியை இன்னும் ஒரு அரசு ஊழியராக தனது கடமைகளைச் செய்து வருவதாக கல்வி அமைச்சர் பத்லினா சிடெக் ( Fadhlina Sidek ) கூறினார். விசாரணை தொடர்வதை உறுதி செய்வதற்கு நாங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம், அதாவது விசாரணைக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய நாங்கள் உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறோம்
என அவர் கூறினார்.

ஒரு பெண் ஆசிரியை, தொழிற்நுட்டாளர் ஒருவருடன் உறவு வைத்திருப்பதாகக் கூறப்படும் பிரச்னை குறித்து கருத்துரைக்கும்படி வினவப்பட்டபோது பட்லினா இதனைத் தெரிவித்தார். இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பான விஷயமாக மாறியது.வைரலான இந்த விவகாரத்தை தனது தரப்பு தீவிரமாகக் கருதுவதாகவும், அனைத்து ஆசிரியர்களும் அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட நேர்மை மற்றும் கற்பித்தல் நெறிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதில் முழுப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும் பட்லினா கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!