Latestமலேசியா

மலாக்காவில் வாகன திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ஹரஸ் கும்பல் முறியடிப்பு -நால்வர் கைது

மலாக்கா, மார்ச் 25 -இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மலாக்கா தெங்கா மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடந்துவரும் வாகனத் திருட்டுகள், வீடுகளை உடைத்து திருடுவது மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஹர்ராஸ் ( Harras) கும்பல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

மார்ச் 19 ஆம் தேதி Permatang Pasir ரில் குற்றப்புலனாய்வுத்துறை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் நால்வர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த வெற்றி கிடைத்துள்ளதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் கிறிஸ்டோபர் பதிட் ( Christoper Patit ) தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் திருட்டு குறித்த புகார் கிடைத்த 24 மணி நேரத்திற்குள்,
24 முதல் 32 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

கண்டாங் ,( Kandang ) , பெம்பான், பன்டார் ஹிலிர் மற்றும் Tanjung Minyak பகுதிகளில், கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தக் குழு செயல்பட்டு வந்ததோடு , மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் திருட்டுகள், அத்துடன் வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட குறைந்தது 12 குற்றச் செயல்களில் அவர்கள் ஈடுபட்டது விசாரணயில் தெரியவந்துள்ளது.

தடயங்களை அழிப்பதற்காகவும், வருமான ஆதாரத்தை உருவாக்குவதற்காகவும், மாற்றியமைக்கப்பட்ட ‘மாஸ்டர் கீ’ அல்லது ‘டி-பார்’ கருவியைப் பயன்படுத்தி யமஹா 125ZR மற்றும் ஹோண்டா EX5 மோட்டார் சைக்கிள்களைக் குறிவைத்து, பின்னர் வாகனத்தின் பாகங்களைப் பிரித்து மூன்றாம் தரப்பினருக்கு விற்பதே இவர்களின் குற்ற நடவடிக்கைகளாக இருந்ததாக மலாக்கா போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கிறிஸ்டோபர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!