
பினாங்கு, மே 14- கடந்த மே 10-ஆம் தேதி, ‘Chai Leng Park Multipurpose’ மண்டபத்தில் தற்கொலையைத் தடுக்கும் திட்டங்களை இலவசமச்க அமல்படுத்தி மக்களுக்கு உதவி வரும் மலேசிய சிநேகம் அமைப்பின் 7ஆம் ஆண்டு நிறைவு விழாவும் நிதி திரட்டும் நிகழ்வும் அண்மையில் பினாங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெராய் சட்டமன்ற உறுப்பினரும் வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.
மலேசிய சிநேகம் அமைப்பு, தற்கொலையைத் தடுக்கும் திட்டங்கள் அமல்படுத்துவதற்கும், மனநல சேவைகள் மற்றும் வெளிநடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும், திரட்டப்பட்ட இந்நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
500க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்ட இந்நிகழ்ச்சியில், 100,000 ரிங்கிட் நிதி திரட்டுவது நோக்கமாக இருந்த நிலையில், வந்திருந்தோரின் பேராதரவோடு எதிர்பார்த்ததைவிட அதிகமான நிதி திரண்டதாக அதன் இயக்குனர் டத்தோ டாக்டர் புளோரன்ஸ் சின்னையா தெரிவித்தார்.
இவ்வேளையில், தங்களின் அர்ப்பணிப்புள்ள தன்னார்வலர்கள் குழுவிற்கும், நன்கொடையாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்களுக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்து கொண்டார் அவர்.
தற்கொலைகளை தடுத்து மக்களின் மனநலத்தைப் பாதுகாத்து வரும் சிநேகம் அமைப்பு, திரட்டப்படும் இந்த நிதியின் மூலம், தனது தொலைப்பேசி உதவி சேவையின் நேரத்தை கூட்டுவது, முறையாக பயிற்சியளித்து தொண்டூழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவுள்ளனர்