
செப்பாங், ஜூன் 3 – கோலாலம்பூர் அனைத்துலகச விமான நிலையமான (KLIA) வில் நுழைவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யாததால் மலேசியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 279 வெளிநாட்டினரை எல்லைக் கண்காணிப்பு கட்டுப்பாட்டு நிறுவனம் நேற்று நாடு கடத்தியது. 2023 ஆம் ஆண்டில் எல்லை கண்காணிப்பு கட்டுப்பாடு நிறுவனம் அமைக்கப்பட்டது முதல் நுழைவு வசதிகளைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக ஒரே நாளில் அதிகமான சட்டவிரோத வெளிநாட்டினர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களும் ஆவணச் செயல்முறைக்குப் பிறகு உடனடியாக தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டனர். எல்லைப் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நாடுகடத்தல் நடவடிக்கை உள்ளது. இதனால் தகுதிவாய்ந்த மற்றும் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் நபர்கள் மட்டுமே நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. மலேசியாவில் பொது விடுமுறை நாட்களில் வெளிநாட்டினரின் சட்டவிரோத நுழைவு போக்கு அதிகரித்து வருவதாக எல்லை கண்காணிப்பு கட்டுப்பாட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.