
பெய்ஜிங், ஜூன் 25 – தென்மேற்கு சீனாவின் குய்சோ ( Guizhou )
மாநிலத்திலுள்ள ஒரு வர்த்தக வளாகம் வேகமாக வெள்ளத்தில் மூழ்கி வருகிறது. அந்தப் பகுதி 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரிய அளவில்வெள்ளப்பெருக்கை எதிர்கொள்கிறது என்று the sun Uk செய்தி வெளியிட்டுள்ளது.
Rongjiang மாவட்டத்திற்கு அருகேயுள்ள மிகப் பெரிய வர்த்தக வளாகத்தில் இந்த வெள்ளப் பேரிடர் ஏற்பட்டுள்ளது. அந்த வர்த்தக வளாகத்தின் மேல் தளங்களில் இருந்து தண்ணீர் வேகமாக கீழே விழுவதை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகளில் காணமுடிந்தது. இது ஒரு நீர்வீழ்ச்சி போன்ற காட்சியை உருவாக்கியது.
துணிகள் மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டு மிதப்பதைக் காண முடிந்தது.
பல வாகனங்கள் நிலத்தடியில் நிறுத்தப்பட்ட பார்க்கிங் பகுதிக்குள் அடித்துச் செல்லப்பட்ட பயங்கரமான தருணத்தை மற்ற காட்சிகள் காட்டுகின்றன.
அந்த வாகனங்களில் ஓட்டுநர்களும் இருந்தனர். தொடர்ச்சியான கனமழையால் ரோங்ஜியாங் ஆற்றில் நீர்மட்டம் 114.6 மீட்டராக உயர்ந்ததை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சுமார் 300,000 மக்கள் வசிக்கும் ரோங்ஜியாங், கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக பெரிய அளவில் வெள்ளப் பெருக்கை சந்தித்துள்ளது.