Latestமலேசியா

ஸ்கூடாயில் விரைவுப் பேருந்து குடைசாய்ந்தது; 10 பேர் காயம்

ஸ்கூடாய், மார்ச்-9-ஜோகூர், ஸ்கூடாயில் விரைவுப் பேருந்து தடம்புரண்டு சாலையோரமாக தலைக் குப்புறக் கவிழ்ந்ததில், 10 பயணிகள் காயமடைந்தனர்.

அவர்களில் இருவர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

நேற்றிரவு 8 மணியளவில் Batu 11, Kampung Sepakat Baru-வில் இவ்விபத்து நிகழ்ந்தது.

தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு – மீட்புத் துறை, சிறப்புக் கருவிகளைப் பயன்படுத்தி, பேருந்து ஓட்டுநர் உட்பட அனைவரையும் காப்பாற்றி வெளியே கொண்டு வந்தனர்.

காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிக்சை வழங்கப்பட்டு அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!