
ஸ்ரீ அமான், ஜனவரி-14-சரவாக், ஸ்ரீ அமான், தாமான் முத்தியாரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஒரு தம்பதியர் உடலில் கடுமையான காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
45 பள்ளித் தலைமையாசிரியரும், ஒரு தாதியான அவரின் 44 வயது மனைவியுமே சடலமாக மீட்கப்பட்டனர்.
காலை வெகுநேரமாகியும் படுக்கையறையிலிருந்து பெற்றோர் வெளிவராததால் சந்தேகமடைந்த பிள்ளைகள், பின்னர் உயிரற்ற உடல்களைக் கண்டு போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
எனினும், கொலைச் சம்பவமாக வகைப்படுத்தி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



