Latestமலேசியா

அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிரொலியாக ஹோர்முஸ் நீரிணையை மூட ஈரானிய நாடாளுமன்றம் இணக்கம்

தெஹ்ரான், ஜூன்-23 – உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் நீரிணையை (Strait Of Hormuz) மூடுவதற்கு ஈரானிய நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்கா ஈரானின் Fordow, Natanz, Isfahan ஆகிய 3 அணு சக்தி நிலையங்களை தாக்கியதன் எதிரொலியாக இந்த அதிரடி முடிவு அமைந்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையானது, ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே உள்ள ஒரு கப்பல் வழித்தடமாகும்.

பாரசீக வளைகுடாவையும் அரபிக் கடலையும் இணைக்கும் இந்த நீரிணை வழியாகத் தான், சவூதி அரேபியா, ஈராக், குவைத், ஐக்கிய அரபு சிற்றரசு, ஈரான் போன்ற பாரிய எண்ணெய் உற்பத்தி நாடுகள் எண்ணெய் ஏற்றுமதி செய்கின்றன.

தவிர, LNG எனப்படும் திரவமயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் உலகின் முக்கிய ஏற்றுமதி நாடான கட்டாரும், முழுமையாக இந்த நீரிணையையே நம்பியுள்ளது.

இந்த நீரிணையின் வடபகுதியை ஒட்டியுள்ள ஈரான், அவ்வப்போது அதனை ஓர் அரசியல் அழுத்தக் கருவியாக பயன்படுத்தி வருகிறது.

ஹோர்முஸ் நீரிணையை மூடப்போவதாக கடந்த காலங்களில் பல முறை மிரட்டியிருந்தாலும் அதனை முழுமையாக அது செயல்படுத்தவில்லை.

ஆனால் இப்போது நாடாளுமன்றமே தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

ஈரானின் இம்முடிவால் உலக எண்ணெய் சந்தையே அதிர்ந்துபோயுள்ள நிலையில், மத்திய கிழக்கின் நிலவரம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சண்டையில் அமெரிக்கா தலையிட்டதை அடுத்து, இப்போது உலக எண்ணெய் அது சந்தையையும் தாக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!