
கோத்தா பாரு, மே 26 – தும்பட் அருகே உள்ள பலேக்பாங்கில்
(Palekbang) கில் மே 20 ஆம்தேதி நகைக் கடை உரிமையாளர் கடத்தப்பட்டதற்கு, பணத்திற்காக மிரட்டி, அவரிடம் 30 கிலோ தங்கத்தை ஒப்படைக்கச் சொன்னதுதான் காரணம் என்று நம்பப்படுகிறது.கடத்தப்படுவதற்கு முன்பு, நான்கு பேர் கொண்ட குழு பாதிக்கப்பட்டவரிடமிருந்து 30 கிலோ தங்கத்தை கோரியதாக சந்தேகிக்கப்படுவதாக கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோப் மாமாட் ( Mohd Yusof Mamat ) தெரிவித்தார். பணம் பெறும் முயற்சியில், அந்தக் குழுவால் கடத்தப்படுவதற்கு முன்பு, அவர்கள் கோரிய தங்கத்தை நகைக்கடை உரிமையாளர் கொடுக்கவில்லை.
எனினும் அவர் பிணைப்பணம் கொடுக்கவில்லை என்பதால் கடத்தப்பட்ட நாளிலேயே அவரை கடத்தல்காரர்கள் விடுவித்தனர்.
அவர்களை கண்டுப்பிடிப்பதற்காக மாநிலம் முழுவதும் மற்றும் எல்லைப் பகுதிக்கு அருகில் சாலை சோதனை உட்பட பெரிய அளவிலான நடவடிக்கைகளை போலீஸ்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அந்த நகைக்கடை உரிமையாளரை விடுவிப்பதற்கு முன்பு போலீஸ் நடவடிக்கை மேற்கொள்கொள்ளவிருப்பதை கடத்தல்காரர்கள் அறிந்திருக்கலாம் என்று முகமட் யூசோப் தெரிவித்தார். 30 கிலோ தங்கம் கேட்ட சந்தேக நபரை அந்த நகைக்கடை உரிமையாளர் அடையாளம் கண்டுகொண்டதாக கூறப்படுகிறது.
44 வயதுடைய நகைக்கடை உரிமையாளரைக் கடத்திய சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நான்கு சந்தேக நபர்களை கிளந்தான் போலீஸ் தேடி வருவதாக இதற்கு முன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. கடத்தல்காரர்கள் தங்களது நடவடிக்கைக்கு சுசுகி ஸ்விஃப்ட்
( Suzuki Swift ) காரைப் பயன்படுத்தியுள்ளனர் .