
காலாபாக்கான், ஜனவரி-26 – 9 வயது பெண் பிள்ளையைக் கடத்தி கற்பழித்ததாகச் சந்தேகிக்கப்படும் மாற்றான் தந்தை, சபா, காலாபாக்கானில் கைதாகியுள்ளார்.
அச்சிறுமியின் தாய் வெள்ளிக்கிழமை போலீஸில் புகார் செய்ததை அடுத்து, வெளிநாட்டவரான 32 வயது அவ்வாடவர் கைதானார்.
அச்சம்பவம் நடந்தது கடந்தாண்டு ஆகஸ்டில்; ஆனால் விஷயம் வெளியே தெரிந்தால் மகளைக் கொன்று விடுவேன் என தனது முன்னாள் கணவருமான அவ்வாடவர் மிரட்டியதால், இவ்வளவு நாள் அம்மாது போலீஸில் புகார் செய்யாமல் இருந்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர் குடியிருப்பிலிருந்து அச்சிறுமியை வெளியே கடத்திச் சென்று, அந்நபர் கற்பழித்துள்ளார்.
இந்நிலையில் சந்தேக நபர் விசாரணைக்காக 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறையும் பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.