Latestமலேசியா

ஈப்போ கொலையில் மர்மம்; பிரேதப் பரிசோதனையில் துப்பாக்கிச் சூட்டுக் காயம்

ஈப்போ, ஜூன் 26 – கடந்த செவ்வாய்க்கிழமை, தாமான் தாசேக் டாமாயிலுள்ள வீடொன்றில் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்த ஆடவரின் பிரேதப் பரிசோதனை முடிவுகளில் அவரது இடது பக்க மார்பில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

57 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவரின் உடல், பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறைத் தலைவர் அபாங் ஜைனல் அபிதீன் அபாங் அகமது தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விசாரணைக்கு உதவுவதற்காக உயிரிழந்த சாங் கிம் ஃபுவாட்டின் மகனை அடுத்த 7 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

இவ்வழக்கு கொலை குற்ற சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதோடு, தகவல் அறிந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினரைத் தொடர்புக்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!