
காஜாங்கில் அபாயகரமான Methadone திரவத்தை உட்கொண்டதில் 11 வயது குழந்தை உயிரிழப்பு; தாய் கைது
காஜாங், பிப்ரவரி-12,
தனது 3 குழந்தைகளுக்கு methadone எனும் போதைவிலகும் திரவத்தை குடிக்கக் கொடுத்த சந்தேகத்தில், காஜாங்கில் 35 வயது தாய் கைதுச் செய்யப்பட்டார்.
3 பிள்ளைகளில் 11 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
மற்ற 2 குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீஸார் விசாரணை தொடங்கியுள்ளனர்.
அம்மாது எதற்காக குழந்தைகளுக்கு அத்திரவத்தைக் குடிக்கக் கொடுத்தார், அவருக்கு எங்கிருந்து அது கிடைத்தது போன்ற கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.
Methadone பொதுவாக போதைவிலகும் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்தாக இருந்தாலும், குழந்தைகளின் உயிருக்கு அது ஆபத்தானதாகும்.



